கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள் : பெருமழை விஜய்

கவிதைமணி

நவரசத்தைக் காட்டும்
நல்ல     முகங்களில்...
பிரதானப்    பங்கு
கண்களுக்கே  யென்று 
அனைவரும்  அறிவர்!
அகத்தால் உணர்வர்!

கனிவான  பார்வையில் 
காதல்    மலரும்!
இரக்கப்   பார்வையில்
இரட்டிப்பாகும் மகிழ்ச்சி!
கோபப்    பார்வையில்
கொண்டாட்டம் குறையும்!
வார்த்தைகள்  விளக்காததை...
பார்வைகள்    விளக்கிடும்!

கள்ளப்  பார்வையும்...
காந்தப்  பார்வையும்...
கள்ளம் செய்வோரின்
திருட்டுப் பார்வையும்...
உலகுக்கு   அவரை 
உணர்த்திடும் பார்வைகள்!

உக்கிரப்  பார்வையில்
உலகின்   கொடுமையை
இறைவன் அழிப்பதாய்
இவ்வுலகோர் நம்புவர்!

கண்கள்  செய்யட்டும்
காதல்   யுத்தத்தை!
காதல் ஒன்றால்தான் 
கவினுலகம் வாழ்கிறது!
காதலர்க்கு மட்டுமே...
பூவுலகம் சொர்க்கமாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT