கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: திருமலை சோமு

கவிதைமணி

ஓரவிழிப்பார்வையால்
மெளன மொழி பேசி - என்
இதய வீணையில் 
சுக ராகம் இசைக்கிறாய் 

தென்றல் வருடும் 
அதேவேளையில்

அதிர்வலைகள் தாங்காத
தந்திக் கம்பியில் - உன்
மொத்தப் பார்வையால்
யுத்த முரசு கொட்டிச் 
செல்கிறாய்..!

கத்தும் கடலோசையை
மனசுக்குள் தந்துவிட்டு
சாந்தமாய் நீயும்
கடந்து போகிறாய்

கஜினி முகமதுவின் 
படையெடுப்பாய்
உன் யுத்த கண்களுக்கு 
தோற்றுப் போகும் நான்
கரை தீண்டும் 
அலை அலையாய்
மீண்டும் மீண்டும் 
பின் தொடர்கிறேன்..!

வீழ்வது நானானாலும்
வெல்வது காதலாகட்டும்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT