நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 11

செ.குளோரியான்

அளவுஇயன்ற ஏழ்உலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துஉரைத்த
அளவுஇயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
வளஉரையால் பெறல்ஆகும் வான்ஓங்கு பெருவளமே.

அளவற்ற ஏழு உலகங்களில் வாழ்கிற எல்லாருக்கும் பெருமான், கண்ணன்.

அத்தகைய கண்ணனை, வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட, அழகிய குருகூரில் அவதரித்த சடகோபன் அன்போடு போற்றிய பெருமைமிக்க அந்தாதிப் பாடல்கள் ஆயிரம்,

அவற்றுள் இந்தப் பத்துப் பாடல்களிலும் உள்ள வளம் நிறைந்த சொற்களைப் பாடுவதால், வானளவுக்கு உயர்ந்த பெருவளத்தைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT