நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 84

செ.குளோரியான்

வாழ்த்தி அவன்அடியைப் பூப்புனைந்து, நின்தலையைத்
தாழ்த்து இருகை கூப்புஎன்றால் கூப்பாது, பாழ்த்தவிதி,
எங்குஉற்றாய் என்றுஅவனை ஏத்தாது, என்நெஞ்சமே,
தங்கத்தான் ஆமேலும் தங்கு.

பாழும் விதியைக்கொண்ட என் நெஞ்சமே,

எம்பெருமானை வாழ்த்து, அவனுடைய திருவடிகளில் பூக்களைப் போட்டு, உன்னுடைய தலையைத் தாழ்த்தி, இரு கைகளையும் குவித்து வணங்கு என்றால், நீ வணங்க மறுக்கிறாய்,

இனிமேலாவது நீ எம்பெருமானை வணங்கி, 'எங்கே இருக்கிறாய் ஐயா' என்று தேடித் துதிப்பாயாக, அப்படிச் செய்யாமல் இருப்பதுதான் உன் விருப்பம் என்றால் அப்படியே இருந்துவிடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT