நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1

செ.குளோரியான்

உயர்வுஅற உயர்நலம் உடையவன் எவன் அவன்,
மயர்வுஅற மதிநலம் அருளினன் எவன் அவன்,
அயர்வுஅறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர்அறு சுடர்அடி தொழுதுஎழு என் மனனே.

தன்னைவிட உயர்வாக எதுவும் இல்லை என்கிற அளவுக்கு உயர்ந்த குணங்களைக் கொண்டவன், என்னிடமிருக்கும் அறிவின்மை அழியும்படி அறிவாகிய நலனை வழங்கியவன், சோர்வில்லாத அமரர்களின் தலைவன் எம்பெருமான்.

என் மனமே, துயரங்களை அறுக்கும் அவனது ஒளிநிறைந்த திருவடிகளைத் தொழுவாயாக, அதன்மூலம் பிறவிக்கடலிலிருந்து கரையேறுவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT