நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் - 11

வைத்த மாநிதியாம் மதுசூதனனையே
                                                    அலற்றிக்
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச்
                                                    சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்
                                                    திருக்கோளூர்க்கே,
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன்
                                                    உலகு ஆள்வாரே.

சேர்த்துவைத்த சிறந்த நிதியைப்போன்றவன் மதுசூதனன், அத்தகைய பெருமானைப் பாராட்டி, கொத்தாக மலர்கள் மலர்கின்ற சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூரைப்பற்றியவை. இப்பாடல்களை மனத்தில் வைத்து உரைப்பவர்கள், திகழ்கின்ற பொன்னுலகான பரமபதத்தை ஆள்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT