நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் - 11

தெய்வநாயகன், நாரணன், திரிவிக்கிரமன் அடி
                                                                          இணைமிசைக்
கொய்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவர மங்கை மேய
                                                                          பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆரா அமுதே.

தெய்வநாயகன், நாரணன், திரிவிக்கிரமனாகிய எம்பெருமானின் திருவடிகளிலே, கொய்யப்படுகின்ற பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் செய்தார், அவற்றுள், குளிர்ச்சியான ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தைப்பற்றி எழுதப்பட்ட இந்தப் பத்து பாடல்களையும் எப்போதும் பாட வல்லவர்கள் வானோருக்குத் தெவிட்டாத அமுதமாகத் திகழ்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT