நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்


பாடல் - 11

கட்கு அரிய பிரமன், சிவன், இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே.

மக்களால் காண அரியவர்களாகிய பிரமன், சிவன், இந்திரன் போன்றோராலும் கண்ணனைக் காண இயலாது. அத்தகைய பெருமானைக் குருகூர்ச் சடகோபன் பாடிய மதிப்புமிகுந்த ஆயிரம் திருப்பாடல்களிலே, இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள், மதிப்பு மிகுந்த வானவர்களோடு என்றைக்கும் எம்பெருமானைப் பிரியாமல் சேர்ந்திருப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT