நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 10

செ.குளோரியான்


பாடல் - 10

இல்லை அல்லல், எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்,
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே.

துன்பங்கள் இனி இல்லை, எனக்கு இனி என்ன குறை? (ஏதுமில்லை.) தாமரை மலரிலே அமர்ந்த திருமகள் அமரும் திருமார்பைக்கொண்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம், கற்களால் கட்டப்பட்ட மதிள் சுவரால் சூழப்பட்ட திருக்கண்ணபுரம். அந்த ஊரின் பெயரைச் சொன்னால், துயரங்கள் என்றைக்கும் நம் பக்கத்தில் நெருங்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT