நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 8

செ.குளோரியான்

பாடல் 8

கண்ணுள் நின்று அகலான், கருத்தின்கண் பெரியன்,
எண் இல் நுண்பொருள், ஏழ் இசையின் சுவைதானே,
வண்ண நல் மணிமாடங்கள்சூழ் திருப்பேரான்
திண்ணம், என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே.

யாராலும் சிந்தித்து அறியமுடியாதபடி நுட்பமான தன்மையைக்கொண்டவன், ஏழிசையின் சுவையைப்போன்றவன், அழகிய, நல்ல மணிமாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருப்பவன், எம்பெருமான், அத்தகைய பெருமான், என் கண்ணிலே நிற்கிறான், அங்கிருந்து விலகுவதில்லை, எனக்குப் பரமபதத்தைத் தரவேண்டும் என்ற கருத்திலே உறுதியாக இருக்கிறான், அப்பெருமான் இன்றைக்கு என் மனத்திலே செறிவாகப் புகுந்தான், இது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT