தினம் ஒரு தேவாரம்

94. பூவார் கொன்றை - பாடல் 8

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 8:

    எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றிக்
    கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
    எடுத்த பாடற்கு இரங்கும் அவர் போலாம்
    பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே 

விளக்கம்:

கடுத்து=கோபம் கொண்டு: பாடல்=சாமகானம்; பொடி=திருநீறு


பொழிப்புரை:

தனது வழியில் குறுக்கிட்டது என்று தவறாக கருதி கயிலை மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் நெரியும் வண்ணம் கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கனது ஆற்றலை அடக்கியவர் சீர்காழி தலத்தில் உறையும் பெருமானாவார். மேற்கண்டவாறு மலையின் கீழே அமுக்குண்டு வருந்திய அரக்கன் இராவணன், தனது தவறினை உணர்ந்து, சாமகானத்தால் பெருமானைப் புகழ்ந்து பாட அரக்கனுக்கு அருளிய பெருமான், தனது திருமேனி முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு புனிதராக விளங்குகின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT