தினம் ஒரு தேவாரம்

106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 10

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 10:

    சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்
    பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்
    பூக்கமழ்ந்து பொன் உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரை மேல் 
    ஆர்க்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

படுவார்=விழுபவர்கள்; சாக்கிய=பௌத்த;

பொழிப்புரை:

சாக்கிய மதம் என்று அழைக்கப்படும் புத்த மதத்தில் விழுவோர்களும் சமண சமயத்தில் விழுவோர்களும், ஏனைய புறப்புறச் சமயங்களில் வீழ்ந்தவர்களும் பெருமானைத் தொழாத காரணத்தால், அவனது திருவருளினைப் பெறுகின்ற பாக்கியம் இல்லாதவர்களாக உள்ளனர். மலர்களின் நறுமணம் உடைத்து, பொன்னை அடித்துக் கொண்டு வரும் அதிகமான நீர்ப் பெருக்கினை உடைய நிவா நதிக்கரையினில் அமைந்துள்ளதும், ஆரவாரங்கள் நிறைந்த சோலைகள் உடையதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானைத் தொழுவீர்களாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT