தினம் ஒரு தேவாரம்

108. மறம் பய மலைந்தவர்- பாடல் 2

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 2:

    விரித்தனை திருச்சடை அரித்து ஒழுகு வெள்ளம்
    தரித்தனை அது அன்றியும் மிகப் பெரிய காலன்
    எருத்து உற உதைத்தனை இலங்கிழை ஓர் பாகம்
    பொருந்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்

விளக்கம்:

எருத்து=கழுத்து; இலங்கு=விளங்கிய; கருத்தினை=கருத்தை உடையாய்;

பொழிப்புரை:

விரித்த சடையை உடையவனாய் பெருகி வந்த கங்கை வெள்ளத்தை சடையில் தாங்கியவனும், அதிகமான வலிமை வாய்ந்த காலனின் கழுத்து ஒடிந்து வருந்தி கீழே விழும் வண்ணம் உதைத்து வீழ்த்தியவனும், அழகுடன் விளங்கும் நகைகளை அணிந்துள்ள உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பொருத்தும் கருத்து உடையவனாக விளங்கி செயல்படுத்தியவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT