தினம் ஒரு தேவாரம்

125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 10

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 10:

    பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய் கடிந்து
    இருத்தல் செய்த பிரான் இமையோர் தொழ
    பூந்தராய் நகர் கோயில் கொண்டு கை
    ஏந்து மான்மறி எம் இறையே
    

விளக்கம்:

பொருத்தமில்=வேத நெறிகளுக்கு பொருத்தமில்லாத; சிறந்த நூல்களாக கருதப்படுவதற்கு பொருத்தம் ஏதும் இல்லாத சமண மற்றும் புத்த இலக்கியங்கள்; சாக்கிய=புத்த

பொழிப்புரை:

வேத நெறிகளுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் பொய்யான சொற்களைக் கடிந்து விளக்கும் பெருமான், இமையோர்கள் தொழும் வண்ணம் பூந்தராய் நகரினில் கோயில் கொண்டுள்ளார். அவரே தனது கையினில் மான் கன்றினை ஏந்தியுள்ள சிவபெருமான் ஆவார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT