தினம் ஒரு தேவாரம்

135. மன்னியூர் இறை  - பாடல் 7

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 7:

    அந்தணாளர் தம்
    தந்தை அன்னியூர்
    எந்தையே என
    பந்தம் நீங்குமே

விளக்கம்:

பந்தம்=மல மாயையால் விளைந்த பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் நிலையானவை என்று தவறாக நினைத்து அவற்றின் மீது உயிர்கள் வைக்கும் பாசக்கட்டு; சடையான் என்றும் வேதியன் என்றும் பல திருமுறைப் பாடல்கள் இறைவனை குறிப்பிடுகின்றன. அந்தணர்களில் சிறந்தவன் என்றும் முனிவர்களில் சிறந்தவன் என்றும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அந்தணர்களுக்கு தலைவனாகவும் அந்தணர்களில் சிறந்தவனாகவும் விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றான். அந்த இறைவனை எங்களது தந்தையே என்று புகழ்ந்து போற்றுவோர், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசத்தினை நீக்கும் வல்லமை உடையவர்களாக விளங்குவார்கள்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT