தினம் ஒரு தேவாரம்

134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 6

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 6:

    தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல்
    திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர்
    பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்
    விரிந்து இலங்கு சடை வெண்பிறையாரே

விளக்கம்:

தெரிந்து இலங்குதல்=மிகுந்த ஒளியுடன் கூடி இருத்தல்;
 
பொழிப்புரை:

மிகுந்த ஒளியுடன் கூடிய செங்கழுநீர் பூக்கள் மலரும் வயல்களும், ஒரே சீராக உயர்ந்து வளர்கின்ற நெற்கதிர்கள் நிறைந்த வயல்களும் சூழ்ந்த திருப்புன்கூர் தலத்தில் நிலையாக பொருந்தி உறைபவர் சிவபெருமான். அவர் தனது விரிந்த சடையில் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனை அணிந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT