தினம் ஒரு தேவாரம்

134. மன்னியூர் இறை - பாடல் 10

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 10:

    குண்டர் தேரருக்கு
    அண்டன் அன்னியூர்த்
    தொண்டுளார் வினை
    விண்டு போகுமே

விளக்கம்:

அண்டன்=அண்ட முடியாதவன், நெருங்க முடியாதவன்; குண்டர்=பருத்த உடலைக் கொண்ட சமணர்கள்; தேரர்=புத்தர்; சிறிய விதையிலிருந்து பெரிய மரங்கள் வளர்வது போன்று, நமது கண்ணுக்கு தெரியாமல் நம்முடன் பிணைந்திருக்கும் வினைகள், நாம் பல இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க காரணமாக உள்ளன. விண்டு போகும் விதைகள் செயலற்று போவது போல், பெருமானின் அருளினால் அவனது அடியார்களை பிணைந்துள்ள வினைகள் செயலற்று விடுகின்றன என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.  

பொழிப்புரை:

பருத்த உடலை உடைய சமணர்களும் புத்தர்களும் அண்ட முடியாதவனாக விளங்கும் பெருமானுக்கு அன்னியூர் தலத்து இறைவனுக்கு தொண்டு செய்யும் அன்பர்களின் வினைகள்  விண்டு போய்விடும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT