தினம் ஒரு தேவாரம்

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 7

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 7:

    பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    எங்குமா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

பைங்கண்=பசிய கண்; இளமையான கண்; ஏறு=எருது; அட்ட மூர்த்தியாக விளங்கும் பெருமான் இல்லாத இடம் உலகில் ஏது.

பொழிப்புரை:

பசுமையான கண்களை உடையவரும் எருதினை வாகனமாகக் கொண்டவரும் ஆகிய பெருமான் தனது சடையினில் பிறைச்சந்திரனை சூடியவர் ஆவார். எங்கும் நிறைந்த பரம்பொருளாக உள்ள இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் அமர்ந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT