வரகரிசி பருப்புப் பொங்கல்
வரகரிசியில் சுவையான பருப்புப் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..
தேவையானவை:
வரகரிசி - 500 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வரகரிசி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
அடுப்பில் நெய்விட்டு மிளகு, சீரகம் முந்திரியை வறுக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயையும் நெய்யில் வதக்கவும்.
Advertisement
Advertisement
வதக்கிய அனைத்தையும் பொங்கலுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கொதிக்கவிடவும். மீதம் உள்ள நெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
- ராஜேஸ்வரி ரவிக்குமார்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.