முகப்பு
விளையாட்டு

பெல்பின்ஸ் கோப்பைக்கான மாநில ஹாக்கி: முதல் போட்டியில் மதுரை அணி வெற்றி

பெல்பின்ஸ் கோப்பைக்கான 17 ஆவது மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது. முதல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:32 AM
பகிர்:

பெல்பின்ஸ் கோப்பைக்கான 17 ஆவது மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணி வென்றது.

பாளையங்கோட்டை ஹாக்கி நலச்சங்கம் சார்பில், அண்ணா விளையாட்டு மைதானத்தின் செயற்கைதளத்தில் நடைபெறும் இப் போட்டியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. ஹாக்கி நலச்சங்கத் தலைவர் மேஜர் எஸ். பெனடிக்ட் தலைமை வகித்தார்.  பெல்பின்ஸ் நிறுவன இயக்குநர்கள் குணசிங் செல்லத்துரை, சஞ்சய்குணசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய சவேரியார் கல்லூரி முதல்வர் கில்பர்ட் கமிலஸ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
முதலாவது போட்டியில் வள்ளியூர் கிங்க்ஸ் பள்ளி அணியை, மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணி 0-3 என்ற கோல்கணக்கில் வென்றது.

தொடர்ந்து இம் மாதம் 23 ஆம் தேதி வரை 4 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு பெல்பின்ஸ் கோப்பை, சான்றிதழ், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. 2 ஆவது நாளான வியாழக்கிழமை (ஆக.21) காலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ்.ஜெ.என். பள்ளி அணியும், மணப்பாறை பள்ளி அணியும் மோதுகின்றன. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணியும், பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி அணியும் மோதுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →