முகப்பு
விளையாட்டு

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா தேர்வு

மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

Updated On : 11 ஆகஸ்ட், 2015 at 5:54 PM
பகிர்:

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சானியா. அதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அவருடைய பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

முன்னாள் நீதிபதி வி. கே. பாலி தலைமையில் அமைக்கப்பட்ட விருது கமிட்டி, சானியா மிர்சாவைத் தேர்வு செய்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.