திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு
திருச்சூர் வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை உயரலாம் என தகவல்
திருச்சூர் வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் ஏப்ரல் 26-ல் நடைபெறவுள்ள பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்காக பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். சம்பவத்தின்போது, அங்கு 38 பேர் இருந்திருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, வெடிவிபத்துக்கு மத்தியில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்தில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த சோதனையின்போது மேலும் சில உடல் பாகங்கள் இருப்பதை மோப்ப நாய்கள் கண்டறிந்தன.
Advertisement
சம்பவ இடத்தில் 125 அதிகாரிகள் மற்றும் 5 நாய்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேலும் 5 உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன.
இதுவரை, சுமார் 132 உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, அங்கு டி.என்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
மீட்கப்பட்ட உடல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை பிரித்தெடுக்கவும், காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் அவற்றை பொருத்தும் பணியிலும் நிபுணர்களின் குழு ஈடுபட்டுள்ளது.