விளையாட்டு

இந்தியா ஏ அபார வெற்றி; அக்‌ஷர் படேல் 6-6-0-4!

அக்‌ஷர் படேல் 6 ஓவர்கள் வீசி 6 மெயிடன்கள் எடுத்தார். அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சநகன்

இந்திய - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான 2-வது 4 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம், வயநாட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில், 260 ரன்களில் சுருண்டது. இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இந்திய ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 417 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. முகுந்த் 72, ராயுடு 71, அக்‌ஷர் படேல் 69 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் பியட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி நாளான இன்று ஆடிய தெ.ஆ அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் திணறியது. 31.4 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா ஏ அணி ஒரு இன்னிங்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய பவுலர் அக்‌ஷர் படேல் 6 ஓவர்கள் வீசி 6 மெயிடன்கள் எடுத்தார். அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2 போட்டி கொண்ட இந்தத் தொடரை இந்தியா ஏ அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT