இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணி நாளை அறிவிப்பு! ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படுவாரா?
சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக நாளை கூடுகிறது. 3-வது ஸ்பின்னர் யார் என்பதுதான் பலருடைய ஆர்வமாக உள்ளது.
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான இந்திய வீரர்கள் நாளை தேர்வு செய்யப்படவுள்ளனர்.
சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக நாளை கூடுகிறது. 3-வது ஸ்பின்னர் யார் என்பதுதான் பலருடைய ஆர்வமாக உள்ளது.
அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார். ஹர்பஜன் சிங், மிஸ்ரா, அக்ஷர் படேல், ஓஜா என இந்த நான்கு பேரிலிருந்து இரண்டு பேர் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள். மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கப் போவதில்லை.
Advertisement
முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 அன்று தொடங்குகிறது.