பொறுப்பேற்றார் பிசிசிஐ-யின் முதல் சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி
இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மும்பை: இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையைத் தொடர்ந்து பிசிசிஐ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக ராகுல் ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக டிஸ்கவரி தொலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராகுல் ஜோஹ்ரி.
தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராகுல், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குருக்கு கீழ் செயல்படுவார்.
Advertisement