விளையாட்டு

ஜடேஜாவே இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர்: பந்து வீச்சு பயிற்சியாளர்

DIN

ரவீந்திர ஜடேஜா தான் இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர் என்று இந்தியாவின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜடேஜா ஆல்-ரவுண்டராக வளர்ந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த கூடுதல் பரிசு என்று கூறினார்.

காயம் காரணமாக சில போட்டிகளிலிருந்து விலகியிருந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தை அவர் பெற்றுள்ளார். 

தனது வலுவான ஆட்டத்தால் பந்து வீச்சு மற்றும் ரன்குவிப்பு ஆகிய இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை ஜடேஜா அளித்து வருகிறார். 

ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சு இரட்டையர்கள் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT