முகப்பு
விளையாட்டு

தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அதிரடியால் பெங்களூரு வெற்றி 

ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் சிறப்பாக பந்து வீசி வந்த நிலையில், ஷாபாஸ், தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:53 AM
தினேஷ் கார்த்திக், ஷாபாஸ்
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 13வது ஆட்டம் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜெய்ஸ்வால் 6 பந்துகளில் வெளியேற அதற்கடுத்து வந்த படிக்கல், ஜோஸ் பட்லருடன் நிலைத்து ஆடினார். இதனால் படிக்கல் 29 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 8 ரன்களில் வெளியேற அதற்கடுத்து வந்த ஷிம்ரோன் ஹிட்மயர், பட்லருடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஆரம்பம் முதலே நிலைத்து ஆடிவந்த ஜோஸ் பட்லர் அரை சதம் கடந்து அணியின் ரன் வேகத்தைக் கூட்டினார். அவர் 47 பந்துகளில் 70 ரன்களைக் குவித்தார். ஹிட்மயர் 31 பந்துகளுக்கு 42 ரன்களை சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. இதனால் பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான டூ பிளெசிஸ், ராவத் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும், டூ பிளெசிஸ் 29 ரன்களிலும் ராவத் 26 ரன்களிலும் தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர், வந்த கோலி 5 ரன்களிலும் வில்லி ரன் ஏதும் எடுக்காமலும் ரூதர்போர்டு 5 ரன்களிலும் வெளியேறினர். 

இதனால், ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் சிறப்பாக பந்து வீசி வந்த நிலையில், ஷாபாஸ், தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 26 பந்துகளை எதிர்கொண்ட 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இருப்பினும், நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் பெங்களூருக்கு அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டி பெங்களூரு அணி வெற்றிபெற்றது. 

ராஜஸ்தான் அணிக்காக போல்ட், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

முழு கட்டுரையைப் படிக்க →