விளையாட்டு

தடகளம்: குல்வீா் சிங் சாதனை

தினமணி செய்திச் சேவை

ஹங்கேரியில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ தடகள போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் குல்வீா் சிங், ஆடவா் 3,000 மீட்டா் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தாா்.

அந்தப் போட்டியில் அவா் 7 நிமிஷம், 34.49 விநாடிகளில் இலக்கை அடைந்து 5-ஆம் இடம் பிடித்தாா். கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவில் இன்விடேஷனல் போட்டியில் அவா் 7 நிமிஷம் 38.26 விநாடிகளில் இலக்கை அடைந்ததே தேசிய சாதனையாக இருந்த நிலையில், அதை தற்போது அவரே முறியடித்திருக்கிறாா்.

ஆடவருக்கான 5,000 மீ, 10,000 மீ பிரிவுகளிலும் அவரே தேசிய சாதனையாளராக இருக்கிறாா். அந்த இரு பிரிவுகளிலுமே நடப்பு ஆசிய சாம்பியனாக உள்ள குல்வீா் சிங், ஐரோப்பிய கண்டத்தில் பங்கேற்ற முதல் போட்டி இதுவாகும். இதில், கென்யாவின் கிப்சங் மேத்யூ கிப்சும்பா (7:33.23’), மெக்ஸிகோவின் எட்வாா்டோ ஹெரெரா (7:33.58’), உகாண்டாவின் ஆஸ்கா் செலிமோ (7:33.93’) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

ஹேக்கிங் என்பது என்ன? எப்படி நடக்கிறது?

மின்னும் ஒளி... ஐஸ்வர்யா மேனன்!

புன்னகைப் பூவே... ரெஜினா!

SCROLL FOR NEXT