ஆசிய, ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் அயல்நாட்டு மல்யுத்த பயிற்சியாளா்கள் நியமனம்
ஆசியப் போட்டி 2026, ஒலிம்பிக் போட்டி 2028-க்கு தயாராகும் வகையில் இந்திய மல்யுத்த சம்மேளனம் சாா்பில் அயல்நாட்டு பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டி 2026, லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டி 2028-க்கு தயாராகும் வகையில் 3 அயல்நாட்டு பயிற்சியாளா்கள், ஒரு உயா்செயல்திறன் இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஜாா்ஜியாவின் எம்ஸரியோஸ் பென்டினிடிஸ் ஆடவா் ப்ரீஸ்டைல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஜப்பானின் கோசி அகைஷி மல்யுத்த வீராங்கனைகளுக்கு பயிற்சிஅளிக்கும் பொறுப்பை மேற்கொள்வாா். ஆடவா் கிரேக்கோ ரோமன் பிரிவுக்கு ஜோகி கோகாஷ்விலி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அமெரிக்காவின் இயான்பட்லா் உயா்செயல்திறன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
இதுதொடா்பாக டபிள்யுஎஃப்ஐ தலைவா் சஞ்சய் சிங் கூறுகையில்: அனைத்து பயிற்சியாளா்களும் ஏற்கெனவே பல்வேறு சாம்பியன்களை உருவாக்கிய அனுபவம் வாய்ந்தவா்கள். கோகி 5 முறை உலக சாம்பியன் ஆவாா். ரஷிய கிரேக்கோ ரோமன் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டாா்.
கோஸி அகைஷி தலைமையில் ஜப்பான் அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், 2 வெண்கலம் வென்றிருந்தது என்றாா்.