ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ரூ. 3 கோடி பரிசுத்தொகை: டுட்டி சந்தை ஊக்கப்படுத்தும் ஒடிஷா அரசு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டங்களில் இந்தியாவின் டுட்டி சந்த் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்...

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டங்களில் இந்தியாவின் டுட்டி சந்த் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இதனால் அவருக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை கிடைத்துள்ளது. 

22 வயதான டுட்டி சந்த், சமீபத்தில் நடைபெற்ற மகளிர் 100 மீ. ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்றில் 11.32 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசியப் போட்டியில் கடந்த 20 வருடங்களில் இந்தப் பிரிவில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. இதையடுத்து நேற்று 200 மீ. ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

100 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற டுட்டி சந்துக்கு ரூ. 1.50 கோடி பரிசுத்தொகை அறிவித்தது நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிஷா அரசு. இந்நிலையில் 200 மீ. ஓட்டத்தில் பதக்கம் வென்றதற்கும் மேலும் ரூ. 1.50 கோடி பரிசுத்தொகையை ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.  இதனால் இரு பதக்கங்கள் மூலமாக ரூ. 3 கோடி பரிசுத்தொகை பெற்றுள்ளார் டுட்டி சந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT