ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுற்றது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இந்தோனேஷியா ஜகார்த்தாவில் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

DIN

இந்தோனேஷியா ஜகார்த்தாவில் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் 132 தங்கம், 92 வெள்ளி மற்றும் 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தை பிடித்தது. 

இந்த நிறைவு விழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணிவகுப்பு நடத்தினர். இதில், இந்தியாவை மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் வழிநடத்தினார். இதையடுத்து, 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT