உலகக் கோப்பை: டாஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்!
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். இதனால் டாஸ் நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.
பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பத்தின்படி டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. வங்கதேச அணியில் மஹ்முதுல்லா, மெஹிடி இடம்பெற்றுள்ளார்கள்.
316 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். அதிசயம் நிகழ்த்துமா பாகிஸ்தான் அணி?