கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டிகளை இங்கிலாந்து அணி வென்றாலும் பணியில் நீடிக்க விரும்பாத பயிற்சியாளர்!

எழில்

உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டிகளுக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளார் டிரெவோர் பேலிஸ்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

நீங்கள் நன்றாகச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நான்கு வருடங்கள் போதுமானது. வீரர்களுக்குப் புதிய குரல் தேவை. அது, அவர்களை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவும். செப்டம்பர் மாதத்துடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிவிடுவேன். 

2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு 2019 போட்டியை வெல்ல என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டோம். அந்தக் கனவை நிறைவேற்றும் தருணம் இப்போது வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

2019 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இறுதிச்சுற்றில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT