கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஷிகர் தவன் விலகல்: ஐஏஎன்எஸ் தகவல்!

எழில்

ஆஸி.க்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது இடதுகை பெருவிரலில் முறிவு ஏற்பட்டதால் காயமடைந்தார் ஷிகர் தவன். இதனால் 3 ஆட்டங்களில் அவரால் ஆட முடியாது என அறிவிக்கப்பட்டது. 

காயமடைந்த இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் குணமடைய 10 நாள்கள் ஆகலாம் என பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். இதனால், பதிலி வீரராக ரிஷப் பந்த் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஷிகர் தவன், உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. காயத்திலிருந்து விரைவில் மீளமுடியாத நிலை உள்ளதால் அவர் விலகியுள்ளதாகக் காரணம் கூறியுள்ளது. 

எனினும் இதுகுறித்து பிசிசிஐயிடமிருந்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT