16.2 ஓவர்களில் வென்ற ஆஸி. மகளிர்..! மோசமாக தோல்வியுற்ற இந்திய மகளிரணி!
இந்திய மகளிரணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. மகளிரணி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிக்கான 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய மகளிரணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
ஆஸ்திரேலியா மகளிர் உடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
ஆஸி. சார்பில் அதிகபட்சமாக பேட்டர் ஜியார்ஜியா ஓல் 46 ரன்களும் போபியே லிட்சிஃபீல்டு 35 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.
இந்தியா சார்பில் பந்துவீச்சில் ரேணுகா தாகுர் சிங் 3, பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
5 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலியன் பந்துவீச்சாளர் மீகன் ஷட் ஆட்டநாயகி விருது பெற்றார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.