முகப்பு
கிரிக்கெட்

இந்தியாவுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடத்தப்படுகிறதா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 நவம்பர் 2024, 10:12 pm IST
ஐசிசி கோப்பை (கோப்புப் படம்)
பகிர்:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

ஹைபிரிட் மாடல்

இந்தியாவுக்கான போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட அனுமதி அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கான போட்டிகளை துபை அல்லது ஷார்ஜாவில் நடத்த தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கராச்சியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி மார்ச் 9 ஆம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் எனக் கூறப்பட்டாலும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments