FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் திலக் வர்மா படைத்துள்ளார்.

Updated On : 23 நவம்பர் 2024, 9:58 pm IST
திலக் வர்மா - படம் | AP
பகிர்:

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் திலக் வர்மா படைத்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்து அசத்தினார். செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில் 107 ரன்களும், ஜோஹன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற போட்டியில் 120 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்திலிருந்து அசத்தினார்.

தொடர்ச்சியாக 3-வது சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, சையது முஸ்தக் அலி கோப்பையில் மேகாலயாவுக்கு எதிராக விளையாடிய இன்றையப் போட்டியில் திலக் வர்மா சதம் விளாசி அசத்தியுள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து அசத்தினார்.அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம், டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் திலக் வர்மா. அதேபோல, டி20 போட்டிகளில் 150 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மாவை, அந்த அணி நிர்வாகம் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக அணியில் தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments