பிரபல வீரர் கே.எல்.ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மெகா ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதில், பிரபல வீரர் கே.எல்.ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
அவர் ரூ.14 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஐபிஎல்லில் கே.எல்.ராகுல் லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.