லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய இலச்சினை வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய இலச்சினை லக்னௌ மற்றும் உத்தரப் பிரதேசத்தைக் கௌரவிக்கும் விதமாக இருக்குமென அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் தொடரில் கடந்த 2024-ல் அறிமுகமானது.
முதலிரண்டு சீசன்களில் (2022, 2023) பிளே ஆப்ஃஸுக்கு முன்னேறிய இந்த அணி கடந்த இரண்டு சீசன்களில் (2024,2025) ஏழாவது இடத்தைப் பிடித்து அதிர்ச்சி அளித்தது.
புதிய இலச்சினையில் கருடன், கிரீடம், யானை இடம்பெற்றுள்ளது. இந்த இலச்சையின் நிறம் தனது முந்தைய நீல நிறத்தில் இருந்து புதிய அடையாளத்திற்காக அடர் சிவப்பு நிறத்தை மாற்றியுள்ளது.
இந்தப் புதிய இலச்சினை மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் போல ஒத்திருக்கிறது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் பங்கில் 70 சதவிகிதத்தை வாங்கியுள்ள சஞ்சீவ் கோயங்கா அதன் பெயரை மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் என மாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.