FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: வலுவான நிலையில் இந்தியா, சறுக்கிய வங்கதேசம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் தன்னை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டுள்ளது. வங்கதேச அணி சரிவை சந்தித்துள்ளது.

Updated On : 23 செப்டம்பர் 2024, 4:43 pm IST
- படம் | AP
பகிர்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் தன்னை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டுள்ளது. வங்கதேச அணி சரிவை சந்தித்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

வலுவான நிலையில் இந்தியா, சறுக்கிய வங்கதேசம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி தனது இடத்தை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி, வங்கதேச அணியை 6 இடத்துக்கு தள்ளியுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம், இந்திய அணிக்கு 12 புள்ளிகள் கிடைத்துள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 71.67 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது. 62.50 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 50 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து 3-வது இடத்திலும், 42.86 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி 4-வது இடத்திலும், 42.19 சதவிகித வெற்றிகளுடன் இங்கிலாந்து 5-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு வங்கதேசம் 39.29 சதவிகித வெற்றிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments