முகப்பு
கிரிக்கெட்

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

இந்தியா ஏ மகளிரணி பெற்ற த்ரில் வெற்றி குறித்து...

Updated On : 15 ஆகஸ்ட் 2025, 1:38 pm IST
இந்தியா ஏ, ஆஸி. ஏ மகளிரணி கேப்டன்கள். - படம்: பிசிசிஐ வுமன்.
பகிர்:

ஆஸ்திரேலியா ஏ மகளிரணியை 49.5ஆவது ஓவரில் வீழ்த்தி இந்தியா ஏ மகளிரணி தொடரைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய மகளிரணி 3 டி20 போட்டிகளில் 0-3 எனத் தோல்வியுற்றது. அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி. அணி 265/9 ரன்கள் எடுத்தது.

Advertisement

Advertisement

இதில் அதிகபட்சமாக அலீஸா ஹீலி 91 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் மின்னு 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 49.5 ஓவரில் 266/8 ரன்கள் எடுத்து வென்றது.

இதில் அதிகபட்சமாக யஷ்டிகா 66, ராதா யாதவ் 60, தனுஜா 50 ரன்கள் அடித்து அசத்தினார்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவையான நிலையில் முதல் பந்தில் தனுஜா 50 ரன்களில் இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி அடுத்து 0,1, 2, 1என 5 பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments