ஓய்வை அறிவித்தார் புஜாரா!
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா குறித்து...
Updated On : 24 ஆகஸ்ட், 2025 at 11:35 AM
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் லெஜெண்ட் செதேஷ்வர் புஜாரா (37 வயது) அறிவித்துள்ளார்.
கடைசியாக புஜாரா 2023-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடி இருந்தார்.
Updated On : 24 ஆகஸ்ட், 2025 at 11:37 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-இல் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான புஜாரா 103 டெஸ்ட்டில் 7,195 ரன்கள் குவித்துள்ளார்.
Advertisement
டெஸ்ட்டில் 19 சதங்கள் 35 அரைசதங்கள் அடித்துள்ளார். டிராவிட்டுக்கு அடுத்து ’இந்தியாவின் சுவர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புஜாரா.
சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த புஜாரா தற்போது ஓய்வினை அறிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவே வாழ்ந்த இவருக்கு பிசிசிஐ சரியான வாய்ப்புகள் வழங்கவில்லை என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.
summary