லக்னௌவில் பனிமூட்டம் @BCCI
கிரிக்கெட்

லக்னௌவில் பனிமூட்டம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ரத்து!

வட மாநிலங்களில் பனிப்பொழிவு எதிரொலி - 4-ஆவது டி20 ரத்து!

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4-ஆவது டி20 ரத்து :

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ஆட்டம் பனிமூட்டத்தால் ரத்தானது. லக்னௌ நகரிலுள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் திடலில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை(டிச. 17) மாலை நடைபெறவிருந்தது.

இந்தநிலையில், அங்கு பனிப்பொழிவு அதிகரித்ததால், ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்படுவதும் தாமதமானது. இதனையடுத்து, இடைவெளிவிட்டு 6 முறை பிட்ச்சுக்குச் சென்று நடுவர்கள் சோதனையிட்டனர். எனினும், பனியின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டதால் ஆட்டம் ரத்தாவதாக அறிவிக்கப்பட்டது.

5 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டுள்ளதான் மூலம், இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றாலும் இந்தத் தொடர் சமனிலேயே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Fourth T20I between India, South Africa abandoned due to excessive fog in Lucknow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்ப பிரச்னை: பிரிந்து வாழ்ந்த கணவரை கொன்ற மனைவி

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5,924 கோடி கடனுதவி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில மாநாடு ஆயத்தக் கூட்டம்

டி20 பாா்வையற்றோா் மகளிா் உலக சாம்பியன் அணியினா் சச்சினிடம் வாழ்த்து

வாழப்பாடியில் கண்களைக் கட்டிக்கொண்டு வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT