லக்னௌவில் பனிமூட்டம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ரத்து!
வட மாநிலங்களில் பனிப்பொழிவு எதிரொலி - 4-ஆவது டி20 ரத்து!
இந்தியா - தென்னாப்பிரிக்கா 4-ஆவது டி20 ரத்து :
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ஆட்டம் பனிமூட்டத்தால் ரத்தானது. லக்னௌ நகரிலுள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் திடலில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை(டிச. 17) மாலை நடைபெறவிருந்தது.
இந்தநிலையில், அங்கு பனிப்பொழிவு அதிகரித்ததால், ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்படுவதும் தாமதமானது. இதனையடுத்து, இடைவெளிவிட்டு 6 முறை பிட்ச்சுக்குச் சென்று நடுவர்கள் சோதனையிட்டனர். எனினும், பனியின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டதால் ஆட்டம் ரத்தாவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
5 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டுள்ளதான் மூலம், இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றாலும் இந்தத் தொடர் சமனிலேயே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Fourth T20I between India, South Africa abandoned due to excessive fog in Lucknow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.