முகப்பு
கிரிக்கெட்

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மீண்டும் முகமது ஷமி!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2025 at 1:09 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்துஅணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் மார்க் வுட் விளையாடாத நிலையில், இன்றையப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் மீண்டும் முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →