முகப்பு
கிரிக்கெட்

2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 23 ஜனவரி, 2026 at 1:31 PM
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராய்பூரில் இன்று (ஜனவரி 23) நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்‌ஷர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

summary

In the second T20 match against New Zealand, the Indian team won the toss and elected to bowl.

முழு கட்டுரையைப் படிக்க →