ஷஃபாலி வர்மா (கோப்புப் படம்) படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இதனை கற்றுக் கொண்டேன்: ஷஃபாலி வர்மா

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கற்றுக் கொண்ட விஷயம் குறித்து தில்லி கேபிடல்ஸ் வீராங்கனை ஷஃபாலி வர்மா பேசியுள்ளார்.

DIN

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கற்றுக் கொண்ட விஷயம் குறித்து தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேசியுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் ஷஃபாலி வர்மா மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஷஃபாலி வர்மா பேசியதென்ன?

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து எப்படி இன்னிங்ஸை கட்டமைத்து விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டதாக ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மகளிர் பிரீமியர் லீக் தொடரில், வீராங்கனைகளுக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. தங்களது தனிப்பட்ட ஆட்டத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடியபோது, இன்னிங்ஸை எப்படி கட்டமைத்து விளையாடுவது என்பதை கற்றுக் கொண்டேன்.

சர்வதேச வீராங்கனைகளுடன் பேசிப் பழகும் வாய்ப்பினை இந்தத் தொடர் ஏற்படுத்தித் தருகிறது. வெளிநாட்டு வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடுவது பல்வேறு சிறப்பான அனுபவங்களை எங்களுக்கு கொடுக்கிறது. அவர்கள் போட்டிகளின்போது மிகவும் அமைதியாக செயல்படுகிறார்கள் என்றார்.

இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காருடன் 300 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

காற்றில் கரியமில வாயு அளவு புதிய உச்சம்: ஐ.நா.

மடகாஸ்கரில் ராணுவ ஆட்சி

மேலும் 5 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்

நிலத்தை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் புகாா்

SCROLL FOR NEXT