முகப்பு
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 17 பிப்ரவரி, 2025 at 4:07 PM
- படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
பகிர்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட் செய்தது.

தில்லி கேபிடல்ஸ் - 141/10

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 19.3 ஓவர்களின் முடிவில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். சாரா பிரைஸ் 23 ரன்களும், அன்னாபெல் சதர்லேண்ட் 19 ரன்களும் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் ரேணுகா சிங் மற்றும் ஜியார்ஜியா வேர்ஹம் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிம் கார்த் மற்றும் எக்டா பிஸ்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.