முகப்பு
கிரிக்கெட்

எனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்: ஹார்திக் பாண்டியா

தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Updated On : 23 பிப்ரவரி 2025, 3:40 pm IST
ஹார்திக் பாண்டியா (கோப்புப் படம்)
பகிர்:

தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து மீண்டும் மும்பை அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்தார். மீண்டும் மும்பை அணியில் இணைந்த அவர் அந்த அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மும்பை அணியின் போட்டிகளின்போது, ஹார்திக் பாண்டியா ரசிகர்களின் கிண்டல், கேலிகளுக்கு ஆளானார்.

Advertisement

Advertisement

ஹார்திக் பாண்டியா கூறியதென்ன?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக பேசிய ஹார்திக் பாண்டியா, தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: எனது வாழ்க்கை முழுமையாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். பழைய நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை எனவும் கூறுகிறார்கள். எனது ரசிகர்கள் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன். புது ஆண்டு, புதிய தொடர், புதிய சவால்கள் எங்களுக்காக காத்திருக்கின்றன. மீண்டும் ஐசிசி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான ரசிகர்களின் எதிர்மறை எண்ணங்களை புறந்தள்ளி, மீண்டும் ரசிகர்களின் அன்புக்குரியவரானார் ஹார்திக் பாண்டியா. அவர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 144 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ஹார்திக் பாண்டியா தற்போது இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments