இந்திய வீரர் ரிஷப் பந்த் சிட்னி டெஸ்ட்டில் பலமுறை பந்தினால் அடிவாங்கி அவதிக்குள்ளானர்.  படங்கள்: ஏபி
கிரிக்கெட்

இதுமாதிரி அடி வாங்கியதில்லை..! ரிஷப் பந்த் பேட்டி!

இந்திய வீரர் ரிஷப் பந்த் சிட்னி டெஸ்ட்டில் பலமுறை பந்தினால் அடிவாங்கி அவதிக்குள்ளானர்.

DIN

சிட்னி பிட்ச் சரியாக இல்லாததால் தன்னால் எப்போதிருந்து அதிரடியாக ஆட வேண்டுமென முடிவெடுக்க முடியவில்லை என இந்திய வீரர் ரிஷப் பந்து கூறியுள்ளார்.

சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 98 பந்துகள் விளையாடி 40 ரன்கள் எடுத்தார்.

ரிஷப் பந்த் இந்த இன்னிங்ஸில் ஆஸி. பந்துவீச்சாளர்களால் பலமுறை உடலில் அடிவாங்கினார். ஒருமுறை கையில் பந்து தெரியுமளவுக்கு அடி வாங்கினார். பின்னர் ஹெல்மெட்டில், அடுத்து வயிற்றிலும் அடி வாங்கினார்.

காயத்துக்கு மருத்துவ சிகிச்சை எடுக்கும் ரிஷப் பந்த்.

கடந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டியிலும் நன்றாக விளையாடிய ரிஷப் பந்த் திடீரென அதிரடியாக ஆரம்பித்து ஆட்டமிழப்பார். அதற்காக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் முட்டாள், முட்டாள், முட்டாள் என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்தபிறகு ரிஷப் பந்த் இது குறித்து பேசியதாவது:

அதிரடியாக விளையாட திட்டமிட முடியவில்லை

இந்த இன்னிங்ஸில் நான் எங்கிருந்து அடிக்க துவங்க வேண்டுமென திட்டமிடவே இல்லை. ஏனெனில் பிட்ச் அந்தமாதிரி இருந்தது. நாங்களும் அந்தமாதிரியான சூழ்நிலையில்தான் இருந்தோம்.

50-50 வாய்ப்புதான் என்பேன். ஏனெனில் நான் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயேகூட அடித்திருக்கலாம். ஆனால், சில நேரம் பாதுக்காப்பான கிரிக்கெட் விளையாட வேண்டியிருக்கும்.

இந்த நேரத்தில் ஒரு விக்கெட் இழந்தால் தொடர்ச்சியாக 2-3 விக்கெட்டுகள் விழுமெனத் தெரியும். அதனால்தான் நான் பாதுக்காப்பாக விளையாடினேன்.

நான் ஆட்டமிழந்த நேரத்தில் அடித்து ஆட வேண்டிய நேரம்தான். ஆனால், அது உள்ளிருந்து வரவேண்டும். நான் இப்படி ஆட வேண்டுமென முன் தீர்மானித்து விளையாட முடியாது.

போட்டி என்னிடம் என்ன கேட்கிறதோ, நான் அதைச் செய்வேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது.

எல்லா பந்துகளையும் அடிக்க முடியாது

நான் விளையாடுவதில் எளிமையை கடைப்பிடிக்கிறேன். அதிகமாக சிந்திப்பதில்லை. ஏனெனில் தொடரில் ரன்கள் குவிக்காதபோது நாம் அதிகமாக சிந்திப்போம்.

வயிற்றில் அடிவாங்கியது வலித்தது. ஆனால், இந்தத் தொடருக்கு அது தேவையானது. அணிக்காக நாம் கடினமாக உழைத்தாக வேண்டும். நான் எங்கு அடிக்கிறேன் என்பது குறித்து சிந்திப்பதில்லை என்னுடைய சிறந்த திறனை நம்பி பந்தினைப் பார்த்து விளையாடுகிறேன்.

இந்த இன்னிங்ஸில் மட்டுமே அதிகமுறை உடலில் அடிவாங்கியிருக்கிறேன். கிரிக்கெட்டில் நம்மால் எல்லா பந்துகளையும் விளையாட முடியாது. கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறையாவது நமக்கு இப்படியாக நடக்கும். அது எனக்கு இன்று நடந்தது. இது குறித்து அதிகமாக சிந்திக்கவில்லை.

185 ரன்கள் போதுமானதில்லை. 220- 250 ரன்கள் நல்ல இலக்காக இருந்திருக்கும். ஆனால், நாங்கள் போராடுவோம். பிட்ச்சில் ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவி இருந்தது. எங்களுக்கும் அதேபோல் இருக்கும் என நினைக்கிரேன்.

டெஸ்ட்டில் மோசமான பந்துக்காக காத்திருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த ஆஸி. அணிக்கு எதிராக அவை குறைவாகவே கிடைக்கும். இருப்பினும் ரன்கள் குவிக்க நாம் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் பிரதீப் ஜான் கிடையாது; செங்கோட்டையன் கெடு குறித்து டிடிவி தினகரன் பதில்

காஸா போர்: ஹமாஸுடன் தீவிர பேச்சுவார்த்தை! - டிரம்ப் தகவல்

திருமா மீது விமர்சனம் காரணமா? புரட்சித் தமிழகம் தலைவர் மீது தாக்குதல்!

ஜோகோவிச்சைப் பழிதீர்த்த அல்கராஸ்..! பல சாதனைகள் முறியடிப்பு!

பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வழக்கு!

SCROLL FOR NEXT