முகப்பு
கிரிக்கெட்

2-வது டி20: இங்கிலாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:19 AM
ஆஸ்திரேலிய கேப்டன் தஹிலா மெக்ராத் - படம் | ஐசிசி
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது.

ஆஸ்திரேலியா - 185/5

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தஹிலா மெக்ராத் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பெத் மூனி 44 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 35 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபிரெயா கெம்ப் மற்றும் சோஃபி எக்கல்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.